இந்த நாட்டில் பரவி வரும் ஆபத்தான 3 நோய்கள் குறித்து சுகாதார திணைக்களத்தின் அறிவித்தல்..!

Prathees
2 years ago
இந்த நாட்டில் பரவி வரும் ஆபத்தான 3 நோய்கள் குறித்து சுகாதார திணைக்களத்தின் அறிவித்தல்..!

இந்த நாட்களில் (17) டெங்கு, இன்புளுவன்சா மற்றும் கொரோனா ஆகிய நோய்கள் சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, குழந்தைகளுக்கு நீண்ட நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டில் வைத்திருக்காமல் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு டாக்டர் தீபால் பெரேரா மேலும் கேட்டுக்கொள்கிறார்.