பங்களாதேஷில் 15 நாட்களில் 300க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளில் 400 பேர் மரணம்
இந்த மாதம் பங்களாதேஷில் ஈத் அல்-அதா விடுமுறையை ஒட்டி பதினைந்து நாட்களில் 300க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளில் 400 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட இரு மடங்கு பேர் காயமடைந்தனர்.
வங்காளதேச பயணிகள் நலச் சங்கம் 2016-ல் இத்தகைய தரவுகளைத் தொகுக்கத் தொடங்கியதில் இருந்து, முஸ்லிம் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் இதுவாகும்.
165 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடு உலகிலேயே அதிக சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களில் ஒன்றாகும். ஈத் விடுமுறை நாட்களில் தலைநகர் டாக்கா மற்றும் பிற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
தரவுகளின் படி ஜூலை 3 முதல் ஜூலை 17 வரை 319 சாலை விபத்துகளில் குறைந்தது 398 பேர் உயிரிழந்தனர் மற்றும் 774 பேர் காயமடைந்தனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் ஜூலை 10 அன்று ஈத் அல்-ஆதா கொண்டாடப்பட்டது.
கடந்த ஏப்ரல் 25 முதல் மே 9 வரை நடந்த 283 சாலை விபத்துக்களில் 376 பேர் உயிரிழந்தனர்மற்றும் கிட்டத்தட்ட 1,500 பேர் காயம் அடைந்த ஈத் அல்-பித்ர் பண்டிகையின் போது மட்டுமே இதுபோன்ற இறப்புகள் என்று கூறுகிறது.