தானிய ஏற்றுமதியை ஆரம்பித்த உக்ரைன்

#Ukraine
Prasu
2 years ago
தானிய ஏற்றுமதியை ஆரம்பித்த உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் காரணமாக உக்ரைனில் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒடேசா துறைமுகத்திலிருந்து துருக்கிய கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பார்வையிட்டார். இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், முதன் முறையாக போருக்கு பிறகு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தானிய கப்பல்கள் புறப்பட முடியாமல் இருக்கிறது. இந்தக் கப்பல்கள் புறப்பட்ட உடன் தானிய ஏற்றுமதி தொடங்கும் என கூறியுள்ளார்.