அமெரிக்கா FBI அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்

#America
Prasu
2 years ago
அமெரிக்கா FBI அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்  கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா  மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். 

மேலும் இது டிரம்ப்  ஆதர்வாளர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அவர்கள் எஸ்பிஐ அதிகாரிகளுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையே நாடு  முழுவதும் உள்ள எஸ்பிஐ அலுவலகங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த சூழலில் அமெரிக்காவில் ஓகியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் உள்ள எஸ்பிஐ அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பை மீறி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.