இன்று முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலை  திறந்திருக்கும்

Prathees
2 years ago
இன்று முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலை  திறந்திருக்கும்

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் வழக்கம் போல் திறக்கப்படும். அதன்படி காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும்.

போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் அதிபர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற போக்குவரத்து ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

பாடசாலை  தொடங்கும் வாரத்தில் போக்குவரத்து சிரமத்தால் மேலும் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய சலுகைகளை அதிபர்கள் செய்ய வேண்டும்.

அந்தச் சலுகைகள் வழங்கப்பட வேண்டிய முறைகள் குறித்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளை மட்டுப்படுத்தவும் அடுத்த மூன்று மாதங்களில்இ பாடத்தை கற்பிப்பதற்காக பள்ளி நேரத்தை பயன்படுத்த வேண்டும், மேலும் பாடசாலை நேரத்திற்கு வெளியே பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளை மேற்கொள்ள கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.