இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

#India #Independence #America
Prasu
3 years ago
இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். 

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

சுதந்திர தினமான உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது: ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆகஸ்டு 15-ம் தேதி அன்று சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாகக் கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது. 

இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர். 

இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4