இலங்கை வங்கியின் தலைவரின் சட்டத்திற்கு முரணான ஊழல் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Kanimoli
2 years ago
இலங்கை வங்கியின் தலைவரின் சட்டத்திற்கு முரணான ஊழல் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை வங்கியின் தலைவரின் சட்டத்திற்கு முரணான ஊழல் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் அவரின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு முன்பாக இந்தப்போராட்டம் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வங்கியின் பணியாளர்களும் தமது ஆதரவை தெரிவித்தனர்.