புல்மோட்டை மத்திய கல்லூரியின்நிர்வாகத்துடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
Kanimoli
2 years ago
புல்மோட்டை மத்திய கல்லூரியின் பாடசாலை நிர்வாகத்துடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலை அடைவு மட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். பரீஸ், புல்மோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தகர் ரிஷான் பாடசாலை அதிபர் எம்.இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.