ரணிலின் வீடு எரிப்பு: சசி மகேந்திரனிடம் சீ.ஐ.டியினர் 7 மணி நேரம் விசாரணை

Prathees
3 years ago
ரணிலின் வீடு எரிப்பு: சசி மகேந்திரனிடம்  சீ.ஐ.டியினர் 7 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் சசி மகேந்திரனிடம் நேற்று (16) 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஜூலை 09ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தின் போது, ​​அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு நபர்களிடம் வாக்குமூலம் பெறும் பணியில் ரகசிய பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக சசி மகேந்திரன் அழைக்கப்பட்டுள்ளார்.

திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, ​​சிரச ஊடகவியலாளர்கள் குழுவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4