சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்த தைவான் ராணுவம்

#Thaiwan
Prasu
3 years ago
சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்த தைவான் ராணுவம்

சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சென்று வந்ததை கடுமையாக எதிர்த்தது. அதற்காக தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சியும் மேற்கொண்டது. இந்நிலையில், சீன நாட்டின் கடலோரத்தில் இருக்கும் ஷியு தீவினுடைய வான் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை, தைவான் ராணுவத்தினர் உடனடியாக சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் இதேபோன்று தைவான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தீவில் சீனாவின் ஆளில்லா விமானமே பறந்திருக்கிறது. அந்த தீவு தடை செய்யப்பட்ட பகுதியாகும். எனவே, அந்த விமானத்தையும் தைவான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4