இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!
Mayoorikka
2 years ago
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இடைக்கால பாதீடு, கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற பாதீடு மீதான முதலாம் நாள் விவாதத்தின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்து எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டனர்.