பணம் செலுத்தும்வரை காத்திருக்கும் நான்கு எரிபொருள் கப்பல்கள்

Prathees
2 years ago
பணம் செலுத்தும்வரை காத்திருக்கும்  நான்கு எரிபொருள் கப்பல்கள்

பணம் செலுத்த வேண்டிய நான்கு எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் அடுத்த வாரத்தில் செலுத்தி இறக்குவதற்கு கிட்டத்தட்ட நூற்று ஐம்பது மில்லியன் டொலர்கள் தேவைப்படும்.

எண்ணெய் கூட்டுத்தாபனம் ஏற்கனவே மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வசூலித்து வருகிறது.

இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெட்ரோல் கப்பல், ஒரு கச்சா எண்ணெய் கப்பல் பணம் செலுத்தும் வரை காத்திருக்கின்றன.