சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராபின் உத்தப்பா

#India Cricket
Prasu
3 years ago
சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராபின் உத்தப்பா

சா்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தாா். இதில் ஐபிஎல் போட்டியும் அடக்கம்.

கா்நாடகத்தைச் சோ்ந்த உத்தப்பா, இந்திய அணிக்காக 2006 முதல் 2015 வரை 9 ஆண்டுகள் விளையாடி, ஒன் டே மற்றும் டி20 ஃபாா்மட்டில் மொத்தமாக 1183 ஓட்டங்கள் அடித்திருக்கிறாா்.

கடந்த 2006 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே கிரிக்கெட் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உத்தப்பா, அந்த ஃபாா்மட்டில் கடைசியாக 2015 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியிருந்தாா். டி20 யில் 2007 இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் முதலாவதாக இருக்க, 2015 இல் சிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் கடைசியாக அமைந்தது.

ஐபிஎல் போட்டியில் 2008 இல் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமாகி, கடைசியாக 2022 இல் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடியிருக்கிறாா்.

உள்நாட்டுப் போட்டிகளில் கா்நாடக அணிக்காக விளையாடிய உத்தப்பா, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூா், ராஜஸ்தான், புணே அணிகளில் விளையாடியிருக்கிறாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4