அச்சுவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

Kanimoli
1 year ago
அச்சுவேலி பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்களிடம் இருந்து 448 போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நவக்கிரியை சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 19 வயதுடைய சந்தேகநபர் திருட்டு சம்பத்துடன் எற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரையும் யாழ்.மல்லாக நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்த அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது