பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

Prathees
1 year ago
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது

மிஹிந்தலையில் கடமையை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த கல்லஞ்சிய காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய இருவர் நேற்று முன்தினம்   கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீப்புக்குளம், சியம்பலாஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு சந்தேக நபர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த கல்லஞ்சிய பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் தற்போது கஹட்டகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இருவரால் கொடூரமாக தாக்கியதாக கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் வரை ரம்பேவ வீதித்தடையில் கடமையாற்றி அதனை முடித்துவிட்டு வீடு திரும்பும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் திருகோணமலை ஏ12 பிரதான வீதியில் மிஹிந்தலை சீப்புக்குளம் கருவலகஸ் ஹின்ன ஆலயத்திற்கு அருகில் உள்ள வீதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சார்ஜன்ட் செல்லச் சென்ற போதே இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் சார்ஜண்டை தரையில் வீசி தாக்கியதாகவும், அருகில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மோதலை தடுக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். .

தாக்குதலின் போது, ​​அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சம்பவத்தை பதிவு செய்து பின்னர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.