ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து!

Mayoorikka
1 year ago
ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து!

தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.