பொருளாதார நெருக்கடி: இலங்கையில் வீழ்ச்சியடைந்த மதுபான பாவனை!

Mayoorikka
1 year ago
பொருளாதார நெருக்கடி: இலங்கையில் வீழ்ச்சியடைந்த மதுபான பாவனை!

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்போது, ஊடங்களுக்கு கருத்துவெளியிட்ட மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.