தலைமன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

Prasu
1 year ago
தலைமன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படையினரால் தலைமன்னார், வெலிபர பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு முயன்ற 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள்  18 வயதிற்கு மேற்பட்ட பெண் ஒருவர் உட்பட  2 ஆண்கள், 18 வயதிற்கு குறைந்த 3 சிறுவர்கள் எனவும் அவர்கள் அனைவரும்  வவுனியா மற்றும் மொரவெவ  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் அனைவரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.