மனைவி கருப்பாக இருப்பதை கேலி செய்த கணவனை கோடாரியால் வெட்டிய மனைவி

Kanimoli
1 year ago
  மனைவி கருப்பாக இருப்பதை கேலி செய்த  கணவனை கோடாரியால் வெட்டிய மனைவி

  மனைவி கருப்பாக இருப்பதை அடிக்கடி கேலி செய்து வந்த கணவனை, மனைவி கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான்(40). இவரின் மனைவி சங்கீதா(30). மனைவி.

சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து அவரது கணவர் கேலி செய்து வருவதும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தாஅல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்