மஹிந்த வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி

Kanimoli
1 year ago
மஹிந்த வீட்டில் நடந்த  நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி

  இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் .

இதன்போது சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவையும் சுப்ரமணியன் சுவாமி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.