மினுவாங்கொடையில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

Prathees
1 year ago
மினுவாங்கொடையில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

மினுவாங்கொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொலைக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட மூவரும் கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல வருடங்களுக்கு முன்னர் காத்தாடி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் இதுவரை இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை 06 ஆகும்.

அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் கொலை ஆகஸ்ட் 2017 இல் நடந்தது, இதில் ஒரு தந்தையும் மகனும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு தந்தை மற்றும் மகன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர், அவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இளைஞன் கடந்த வருடம் ஜூன் மாதம் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் மூவருக்கும் இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மினுவாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இருவரின் சடலங்கள் கொலை இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.