உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Prathees
1 year ago
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

05 வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.