வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக ஆதிவாசி தலைவருக்கு பெயர் தெரியாத கடிதம்

Prathees
1 year ago
வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக ஆதிவாசி தலைவருக்கு பெயர் தெரியாத கடிதம்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தனுக்கு பெயர் தெரியாத கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தனே கடந்த 4ஆம் திகதி கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

வசந்த முதலிகேவின் சகோதரர் இன்று (08) ஊடகங்களுக்கு இந்தக் கடிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மாத்திரை சாப்பிட்டு சாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆதிவாசிகளின் தலைவரை இதில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.குருநாகலிலிருந்து குறித்த கடிதம் வந்துள்ளது.

இதேவேளைஇ பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி 50 நாட்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்ட ஹஷான் ஜீவந்தஇ பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.