காம்பியாவில் 66 குழந்தைகளை கொன்ற சிறுவர்களுக்கான சிரப் இலங்கை உட்பட 42 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது

Prathees
1 year ago
காம்பியாவில் 66 குழந்தைகளை கொன்ற சிறுவர்களுக்கான சிரப் இலங்கை உட்பட 42 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது

காம்பியாவில் 66 குழந்தைகளைக் கொன்றதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டிய நான்கு வகையான சிரப்பைத் தயாரித்த இந்திய மருந்து நிறுவனம் காம்பியாவுக்கு மட்டுமே சிரப்பை ஏற்றுமதி செய்ததாக இந்திய சுகாதார அதிகாரிகள் கூறினாலும், நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் நாற்பத்திரண்டு நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படிஇ அந்தந்த சிரப்களை தயாரித்த மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், இலங்கை உள்ளிட்ட ஆசிய , ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுமார் நாற்பத்திரண்டு நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய வரைபடத்தில் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவிலும் விநியோகிக்கப்படுவதாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்த நான்கு வகையான குழந்தைகளுக்கான சிரப்பைக் குடித்ததால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 அதே சமயம், சர்ச்சைக்குரிய நான்கு குழந்தைகளுக்கான சிரப்கள் காம்பியாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் விநியோகிக்கப்படவில்லை என்றும் மெய்டன் மற்றும் இந்திய சுகாதார அமைச்சகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த நான்கு வகையான சிரப்புகளின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக இந்திய மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.