ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 263 பேருக்கு மருத்துவ பீடத்திற்குள் நுழையத் தடை
Prathees
1 year ago
ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 263 மாணவர்களுக்கு கராப்பிட்டிய மருத்துவ பீடத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை அவமானப்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குறிப்பிடுகின்றார்.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பீடாதிபதியின் பேச்சு நீக்கம்இ
புதிதாகப் படிக்கும் மாணவர்கள் நீண்ட கால்சட்டைஇ நீண்ட கை சட்டை மற்றும் காலணிகள் அணிவதையும்இ புதியவர்கள் சேலை அணிந்து முடியை அலங்கரிப்பதையும் கட்டாயமாக்கியதாக இந்த மாணவர்கள் குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.