மெக்ஸிகோவில் பாருக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் 12 பேர் மரணம்

#Mexico #GunShoot #Death
Prasu
1 year ago
மெக்ஸிகோவில் பாருக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் 12 பேர் மரணம்

மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு  மாகாணத்தில் பார் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாருக்கு  தினம்தோறும் ஏராளமானோர் வருவது வழக்கம். 

அதேபோல் இன்று திடீரென பாருருக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுகாயமடைந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு அரசு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 18 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதம் நடந்தது.  தற்போது இன்னொரு துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும். இந்த சம்பவங்கள் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.