கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த, பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று பலி

Kanimoli
1 year ago
கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த, பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று பலி

கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த, பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இக் குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அத்தோடு கடந்த 14ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அக் குழந்தை உயிரிழந்துள்ளது.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.