குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

Kanimoli
1 year ago
குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

  வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் காலைப் பிராத்தனையின்போது காற்றின் வேகம் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொட்டியுள்ளது.

இதனால் பாதிப்படைந்தவர்களில் 12 மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும் 8 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் , 3 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.