மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் லண்டன் அம்மாகாப்பகத்தினரால் மட்டக்களப்பில் வேலைத்திட்டம்!

Mayoorikka
1 year ago
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் லண்டன்  அம்மாகாப்பகத்தினரால் மட்டக்களப்பில்  வேலைத்திட்டம்!

கிழக்கு மாகணம் மட்டக்களப்பு வடிச்சல்கிராமம் பூச்சாங்கேணி கதிரவெளி பிரதேசத்தில்   தேனெடுத்து, வேட்டையாடி வாழ்வதோடு , மேட்டுநிலப்பரப்பில் கச்சான் ,சோளம், கௌபி,  போன்ற சிறு பயிர்களை பயிரிட்டுவாழும்  தமிழ் இனத்தைச்சேர்ந்த குடிமக்களின் வேண்டுகோளை பரிசீலித்து  மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி , சமூகநலம் பண்பாடு அறப்பணிமையத்தின் ஒழுங்கமைப்பில் , லண்டன் “ஓம்சக்தி அம்மாகாப்பகத்தின்” நிதியனுசரணையில் மிகச்சிறப்பான வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு  மக்களிடம் நேற்றையதினம் 14.10.2022 வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது!   

மட்டக்களப்பு மாவட்டப்பொறுப்பாளர்களில் ஒருவரான சக்தி திரு . காளிதாஸ் அவர்களது தலைமலைமையில் இவ் நிகழ்வானது, மிகச்சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் 95% மான அறப்பணியாளர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் .

batty
batty
batty
batty