ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து உலக சாதனை படத்தை பெண்

Prasu
3 years ago
ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து உலக சாதனை படத்தை பெண்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். 

இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. 

ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார். 

தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது. 

சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். 

சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார். 

இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். 

இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது. சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர். 

2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். 

மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4