துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்
Kanimoli
3 years ago
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் யக்கலமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
யக்கலமுல்லை களுவலகல பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது 3 வயது குழந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே