யாழில் சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

Mayoorikka
1 year ago
யாழில் சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான உறவு காணப்பட்டது. இந்நிலையில் சந்தேகநபர் சிறுமியுடனும் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸாரால் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.