அடுத்த ஆண்டு முதல் தீபாவளி நாளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க நியூயோர்க் அரசு தீர்மானம்

Prasu
3 years ago
அடுத்த ஆண்டு முதல் தீபாவளி நாளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க நியூயோர்க் அரசு தீர்மானம்

நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனை ஏற்று அடுத்த ஆண்டு முதல் (2023) தீபாவளி திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும் போது தீபாவளி திருநாள் என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன். 

இதனால் பள்ளி குழந்தைகள் தீபாவளி தீப திருவிழாவை அறிவதற்கு ஊக்க மளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். 

இதையடுத்து இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4