நட்டத்தில் இயங்கும் மின்சார சபை: மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்

Mayoorikka
3 years ago
நட்டத்தில் இயங்கும் மின்சார சபை: மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை மின்சார சபை 12 பில்லியன் ரூபா வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நட்டத்தை தவிர்த்துக்கொள்வதற்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதோடு கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4