தாக்குதலுக்கு பின் ஒரு கண்ணின் பார்வையை இழந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

Prasu
1 year ago
தாக்குதலுக்கு பின் ஒரு கண்ணின் பார்வையை இழந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கண்ணின் பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்ததாக  அவரது முகவர் கூறுகிறார்.

அவரது மார்பில் இன்னும் 15 காயங்கள் உள்ளன என்று நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஆண்ட்ரூ வைலி ஸ்பெயினின் செய்தித்தாளிடம் கூறினார். இது ஒரு கொடூரமான தாக்குதல்.

வைலி நாவலாசிரியரின் இருப்பிடத்தை வெளியிட முடியாது என்றார். நியூயார்க் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

ருஷ்டி தனது 1988 ஆம் ஆண்டு நாவலான The Satanic Verses க்காக நீண்டகாலமாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.

சில முஸ்லிம்கள் புத்தகத்தை அவதூறாக கருதுகின்றனர். தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர், அமெரிக்காவில் பிறந்த ஹாடி மாதர் கொலை முயற்சி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துவிட்டார்,அவரது கழுத்தில் மூன்று கடுமையான காயங்கள் இருந்தன. அவரது கையில் நரம்புகள் வெட்டப்பட்டதால் ஒரு கை செயலிழந்துவிட்டது. என வைலி எல் பைஸுடனான தனது நேர்காணலில் கூறினார்.