பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 37 பேர் காயம் - பெண் உயிரிழப்பு

Kanimoli
3 years ago
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 37 பேர் காயம் - பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேகாலையிலிருந்து கண்டி நோக்கி தனியார் பேருந்து பயணித்துள்ளதுடன், மாவனெல்லையிலிருந்து கேகாலை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 38 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4