பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு– காயத்துடன் தப்பினார்!

Nila
1 year ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு– காயத்துடன் தப்பினார்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்யும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அவரது கட்சயைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

எனினும், முன்னாள் பிரதமருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அவரது கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.