யாழ். இளவாலையில் இராணுவ புலனாய்வாளர்களால் 24 கஞ்சா பொதிகள் மீட்பு!

Mayoorikka
1 year ago
யாழ். இளவாலையில் இராணுவ புலனாய்வாளர்களால் 24 கஞ்சா பொதிகள் மீட்பு!

இளவாலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 24 கேரள கஞ்சா பொட்டலங்கள் சேண்டாங்குளம் வலிதுண்டல் பாடசாலைக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.