இலங்கையில் இருந்து கனடா சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு!

Mayoorikka
1 year ago
இலங்கையில் இருந்து கனடா சென்ற கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு!

இலங்கையிலிருந்து 306 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று பிலிப்பைன்ஸ் வியட்நாம் சர்வதேச கடல் எல்லையில் மூழ்கிக்கொண்டிருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்துள்ளது.

இந்தக்கப்பலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 306 பேர் உள்ளதாகவும், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் கப்பலில் இருந்து ஒருவர் தகவல் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.