சிறுமி குளிப்பதை காணொளியாக பதிவு செய்த இளைஞன் அயலவர்களால் மடக்கி பிடிப்பு
Kanimoli
1 year ago
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞரொருவரை அயலவர் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் குளிப்பதனை குறித்த இளைஞன் தனது தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த சிறுமி உடனடியாக கூக்குரலிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞர் அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.