தேர்தலை ஒத்திவைத்தால், தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும்

Prathees
3 years ago
தேர்தலை ஒத்திவைத்தால், தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும்

உள்ளுராட்சி தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக பஃபேரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை அவரது சட்டத்தரணிகள் மேற்கொண்டு வருவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல்வாதிகள் உட்பட சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல என்று கூறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4