முகத்தைப் பார்த்ததற்காக மாணவனை அடித்த ஆசிரியர் - மாணவன் மருத்துவமனையில்
சிங்கள பாட நூலகத்தின் பொறுப்பதிகாரி “ஏன் முகத்தைப் பார்த்தாய்?” எனக் கேட்டு தாக்கியதாகக் கூறி 15 வயதுடைய மாணவன் இன்று மாலை ஹொரணை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவின்ன மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 8ம் jpfதி, மற்ற மாணவர்களுடன் நூலகத்திற்கு சென்றபோது, புத்தகங்கள் கிடைத்தவர்களை, அட்டையுடன் வருமாறு கூறி, நூலகத்தை ஒட்டிய பகுதிக்கு அழைf;fg;gl;L புத்தகங்கள் கொண்டு வராத ஒரு சிலர் தாக்கப்பட்டனர்.
அந்த அட்டையை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு நாளை மறுநாள் புத்தகத்தை எடுத்து வருகிறேன் என்று கூறியதாகவும் அப்போது அவர் தாக்கப்படவில்லை எனவும் மாணவன் விடுத்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு ghlq;களுக்குப் பிறகு, ஆசிரியர் தனது வகுப்பிற்குச் சென்றதாகவும், அவரது முகத்தைப் பார்த்ததால், அப்போது வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியரிடம் கூறி, நூலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவனின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
நூலகத்திற்குள் நுழையும் போது காலணிகளைக் கழற்ற ஆசிரியர் அனுமதிக்கவில்லை
மேலும் அவர் அணிந்திருந்த சட்டையை பிடித்து இழுத்து “ஏன் முகத்தை பார்த்தாய்” என்று கூறி நூலகத்திற்குள் அழைத்துச் சென்று வலது கன்னத்திலும் தலையிலும் பலமுறை தாக்கியதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தனது தந்தைக்கு அறிவித்து அதிபரை சந்திக்க தந்தையுடன் சென்ற போது இதுபற்றி தெரிந்து கொண்டு தெரிவிக்கிறேன் என அதிபர் கூறியதாக மாணவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் முதல் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மாணவி மேலும் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் ஹொரணை அடிப்படை வைத்தியசாலையின் அடிப்படை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கல பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.