63 வயதான தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

Kanimoli
1 year ago
63 வயதான தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்

வீட்டின் வரவேற்பு அறையில் உறங்கிக்கொண்டிருந்த 63 வயதான தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தாம் கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை ஒன்று நடந்திருப்பதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் செயற்பட்ட குளியாப்பிட்டிய பொலிஸார், பொல்கொல்லேவ பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி கொல்லப்பட்டவரின் மகனை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் மோரகல் ஜேடிதுரயலாகே சரத் குமாரசிங்க என்ற 63 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகன் மூளை வளர்ச்சி குன்றியவர் எனவும் மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.