மொட்டுக்கட்சி ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

Prabha Praneetha
1 year ago
 மொட்டுக்கட்சி ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். எனினும் இதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.