உலக வங்கியின் கடனுதவியின் கீழ் மற்றொரு யூரியா உரக் கப்பல் நாளை இலங்கைக்கு வருகிறது

Mayoorikka
1 year ago
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் மற்றொரு யூரியா உரக் கப்பல் நாளை  இலங்கைக்கு  வருகிறது

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

22,000 மெட்ரிக் தொன் கொண்ட கப்பல் மலேசியாவிலிருந்து தீவுக்கு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் பருவத்தில் நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு யூரியா உரம் வாங்குவதற்கு 105 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 13,000 மெற்றிக் தொன் யூரியா உரம் இந்த நாட்டில் இதற்கு முன்னர் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இந்த நாட்டுக்கு யூரியா உரம் கையிருப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பருவத்தில்  பதிவு  செய்யப்பட்ட யூரியா உரத்தின் மொத்த அளவு 20,000 மெட்ரிக் டன்.

பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் அனைத்து உழவர் பொது சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.