இலங்கை ரக்பி அணித் தலைவி கண்டுபிடிப்பு

Kanimoli
1 year ago
 இலங்கை ரக்பி அணித் தலைவி கண்டுபிடிப்பு

தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக தென் கொரியா சென்றிருந்த  இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே தென் கொரியா காவலத்துறையினர் மேற்கொண்ட விசாரணை முலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவர் காணாமல் போனதாக தென் கொரிய காவலத்துறையினரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டது.

காணாமல் போனமைக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விரைவில் அவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.