கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவது குறித்து ஜெர்மனி ஆலோசனை
15 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட ஒரு நடவடிக்கையை மீண்டும் தொடங்க ஜெர்மனி திட்டமிட்டு வருகிறது.
2027ம் ஆண்டிலேயே ஆண்களுக்கான கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவது குறித்து பெர்லின் பரிசீலித்து வருகிறது.
ரஷ்யா குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஆயுதப் படைகளை வலுப்படுத்த தன்னார்வ ஆட்சேர்ப்பு மட்டும் போதுமானதாக இருக்காது என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இராணுவ வீரர்களின் பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த அதிகரித்து வரும் கவலைகளே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2035க்குள் தனது படைபலத்தை தற்போதைய 185,000 வீரர்களிலிருந்து குறைந்தது 260,000 வீரர்களாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது.
நவம்பர் மாதம், அரசாங்கம் 18 வயது ஆண்களுக்குக் கட்டாயப் பதிவுடன், ஒரு புதிய தன்னார்வ இராணுவ சேவை மாதிரியை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், சுமார் 300,000 இளைஞர்கள் தொடர்பு கொள்ளப்பட்ட போதிலும், இந்தத் திட்டத்தின் மூலம் 530 புதிய வீரர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், தன்னார்வ முறை மூலம் ஜெர்மனி தனது இலக்குகளை அடைய முடியாவிட்டால், "நாங்கள் கட்டாய இராணுவ சேவைக்குத் திரும்ப வேண்டியிருக்கும்" என்று ஜெர்மன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினருமான தாமஸ் ரோவெகாம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே