கோப் குழுவின் புதிய உறுப்பினராக தயாசிறி

Prabha Praneetha
3 years ago
கோப் குழுவின் புதிய உறுப்பினராக தயாசிறி

நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு மற்றும் பொது நிதி தொடர்பான குழு ஆகியவற்றில் பணியாற்றுவதற்குப் புதிய உறுப்பினர்கள் தெரிவுக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் கோப் புதிய உறுப்பினர்களாக தயாசிறி ஜயசேகர மற்றும் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பிரசன்ன ரணவீர மற்றும் வேலு குமார் ஆகியோர் பொதுக் கணக்குகள் குழுவில் (கோப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா மற்றும் யு.கே.சுமித் உடுகும்புர ஆகியோர் பொது நிதி தொடர்பான குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4