வெளிநாட்டு பெண்கள் அணியும் சாதாரண உடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்ல அனுமதி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
இலங்கையில் கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆடைகளை அணிய முடியாது என பாடசாலை ஆசிரியைகள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
வெளிநாட்டு பெண்கள் அணியும் சாதாரண உடைகளை அணிந்து பாடசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியைகளுக்கென விதிக்கப்பட்டுள்ள புடவை மற்றும் ஒசாரிக்கு பதிலாக கெசுவல் (Casual) இலகு ஆடைகளை அணிந்து செல்ல அனுமதிக்குமாறு கோறி ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் #கெசுவல் உடையணிந்து பாடசாலை சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகள் போன்று அவரவரின் விருப்பத்திற்கேற்ப, வசதிக்கேற்ப ஆடைகளை அணிந்து பாடசாலை வருவதற்கு அனுமதிக்குமாறு இவர்களது போராட்டம் நேற்று முதல் செயன்முறையாக ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது