மாற்று பொருளாதார கொள்கையை வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது

Kanimoli
1 year ago
 மாற்று பொருளாதார கொள்கையை  வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது

1977 ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு பொருத்தமற்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு மாற்று பொருளாதார கொள்கையை அவர் வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இந்தக்குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்ற உரையின்போது சுமத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத்திட்ட யோசனையின்படி, அடுத்து வரும் காலப்பகுதியில் 3 ரில்லியன் ரூபாய்கள் கடனாகப் பெறப்படவுள்ளன.

ஏற்கனவே இதுவரையான காலத்தில் 25 ரில்லியன் ரூபாய்களை இலங்கை கடனாக பெற்றுள்ள நிலையில் இந்த மேலதிக கடன் பெறல் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த வருடத்தில் மாத்திரம் 6.6 பில்லியன் டொலர்களை கடன்களுக்காக செலுத்தவேண்டியுள்ளது என்றும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாமே முன்வந்து 1977 ஆம் ஆண்டு பொருளாதாரம் தவறானது என்று கூறி வாக்குமூலம் வழங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, அந்த வாக்குமூலத்துக்கு எதிராகவே இந்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களை ஸ்திரப்படுத்தவேண்டும். இதனை விடுத்து அரச நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது  என்று குறிப்பிட்ட அனுரகுமார, இன்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டு செலாவணியை அதிகரிப்பதற்காகவே அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு தாம் எதிர்ப்பு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும் அவர் இன்று மாலை வந்து வர செலவுத்தி;ட்டத்துக்கு ஆதரவாக கையை உயர்த்துவார் என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.

ஆடை தொழிலில் 2022 ஒக்டோர் 100க்கு 14 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் காலத்தில் இலங்கையின் ஆடைத்தொழிலுக்கு கிடைக்கவேண்டிய கொள்வனவுக்கட்டளை 30 வீதத்தினால் குறைந்துள்ளது. 

நாட்டின் பொருளாதார சீரற்றுள்ள நிலையில் சுமார் 400 மருத்துவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் 24 உள்ளகப்பயிற்சி மருத்துவ மாணவர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

எனவே நாட்டில் நிலையான பொருளாதாரக்கொள்கையை கொண்டு வர தேர்தல் ஒன்று நடத்தப்பட்;டு மக்கள் விருப்பத்துடன் அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்.

அத்துடன் அனைத்து இனங்களுக்கும் சமவுரிமையை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல்வேண்டும்.

சிறப்பான அரச நிர்வாகம் அமைக்கப்படல் வேண்டும். அத்துடன் ஊழல் இல்லாத நாடு உருவாக்கப்படவேண்டும் என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.

ஊழல்களை தடுப்பதாக கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க,  ஊழல் செய்தோரை தண்டிப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடவில்லை என்று அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு ரணில் கூறவேண்டுமாக இருந்தால், முதலில் சுயமாக தாமே வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சிறைச்சாலையில் பயன்படுத்தும் காற்சட்டையை அணிந்து கொண்டு, மத்திய வங்கி ஊழலுக்காக நான் பொறுப்பேற்று இங்கு வந்துள்ளேன். எனவே ஊழல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கூறவேண்டியிருக்கும் என்று அநுரகுமார தெரிவித்தார்.

அமைச்சர் சிறிபால டி சில்வா கையூட்டல் கோரியதாக ஜப்பானிய அரசாங்கம் முறையிட்டமைக் காரணமாக அவரை கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கினார்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையில் முன்னால் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவை நியமித்தார்.

இந்த விசாரணையின்போது, நிமால் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் இல்லையென்று முன்னாள் நீதிபதி குறிப்பிட்டதாக அனுரகுமார தெரிவித்தார்.

அனுரகுமார இந்தக் கருத்துக்களை வெளியிட்டபோது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சபையில் இல்லாதோரின் பெயர்களை குறிப்பிட்;டு பேசுவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குசலா அல்லது சரோ என்று அழைக்கலாமா? என்று அநுரகுமார கேள்வி எழுப்பினார்.

எனினும் அவரைப் பற்றி தாம் கூறவில்லை. நிமால் சிறிபால டி சில்வாவை பற்றி குறிப்பிடுவதாக அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.

இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொண்ட அனுரகுமார, அவருக்கு என்ன பெயரை தம்மால் கூறமுடியும். அவருக்கு பல பெயர்கள் உள்ளனவே என்று குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க சபையில் இருந்தால், நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர், பில்லியன் கணக்கான பணம் துபாய் வங்கியில் இருப்பதாக கூறப்பட்ட முறைப்பாட்டுக்காக ஜே.சி.வெலியமுன, ரவி வித்தியாலங்கார மற்றும் தில்ரூக்ஷி ஆகியோரை அனுப்பிய பின்னர் என்ன நடந்தது என்று கேட்டிருக்கமுடியும் என்று அனுரகுமார தெரிவித்தார்.

எனவே ஊழல்வாதிகளின் தயவில் இருந்து கொண்டு ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக ரணில் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வெள்ளைக்காரர்களை தெரியும் என்பதால், வெளிநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கப்போவதில்லை.

நாட்டின் நன்மதிப்பை பொறுத்தே அந்த நாடுகள் உதவிகளை வழங்குகின்றன என்று குறிப்பிட்ட அனுர திசாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.

பங்களாதேஷிடம் இருந்து 200 டொலர்களை பெற்ற இலங்கை அதனை திருப்பிச்செலுத்த இரண்டு தடவைகளாக கால நீடிப்பை பெற்றது.

எனினும் அந்த நாட்டின் பிரதமர், இலங்கை குறித்த நிதியை திருப்பிச்செலுத்தவேண்டு;ம் என்று உறுதியான கோரிக்கையை தற்போது விடுத்துள்ளார்.

இதுவே இன்று இலங்கை தொடர்பாக வெளிநாடுகள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பாகும்.

யூரியாவை வழங்கிய உலக வங்கி, ஊழல் இடம்பெறக்கூடாது என்பதற்காக கண்காணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. உலகில் எங்கெல்லாம் ஊழல் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் இலங்கையர் ஒருவர் தொடர்புபட்டிருக்கிறார்.

இதுவே இன்று இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் நிலவும் அபிப்பிராயமாகும்.

இதனை கருத்திற்கொண்டே, நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்க முன்வரும். இதனைவிடுத்து ரணிலுக்காக எந்த நாடும் உதவியளிக்காது என்று அனுரகுமார குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!